Posts

Preparation, Prayer and Practice

Image
  Preparation, Prayer and Practice Lent is a period of Self-Preparation, Self-Examination and Self- Renewal. This time period is to think about us and others.  In my school days many of my friends were good in athletics. Especially long-distance running, they will be at school early morning 5 o’ clock and do their preparation and training. They prepare themselves very hard, running a marathon takes preparation, patience and perseverance. It takes a lot of discipline and dedication. They had to make many sacrifices on food and fitness. Sports meet was very close, without any practice and preparation a friend of mine gave his name to the Marathon race. We said ‘ Machan, you can’t do it you are without any practice, he didn’t listen to our words . He said, ‘I can run very fast; I can break the record.’  On the day of the sports meet everything was ready for the marathon, all the boys were cheering and shouting for their house runners, our friend was ready in the starting li...

கதறும் இறையியல்

Image
கதறும் இறையியல் நாளுக்கு நாள் இயற்கையானது மனிதனின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி அழுது கொண்டிருக்கிறது . மனிதனின் தவறான செயமுறைகள் காரணமாக இயற்கையானது ஓர் தாயை போல தினமும் பிரசவ வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது .                ( உரோமையர்  8: 22)   பிரசவ வலியானது எப்படி ஓர் உடலின் அதிகபற்ச பாகங்களை வேதனைக்குள்ளாகுமோ அதேபோல இயற்கையானது பல வேதனைகளை சுமந்து கொண்டு எம்மத்தியில் கண்ணீர் வடிக்கிறது . மனிதனின் பேராசை ,  அலட்சியம் , பணமோகம் ஆகிய காரணிகள் இயற்கையை கூறுபோட , சுரண்ட முக்கியமான காரணிகளாக இருக்கிறது . இதனால் இயற்கை இரத்தம் சிந்தி துன்பப்படுகிறது .   ' கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நோக்கினார் ,  அவை மிகவும் நன்றாய் இருந்தன   எனக் கண்டார் ' என தொடக்கநூல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது . நன்றாய் இருந்த அனைத்தையும்   ஆண்டவர் தான் உருவாக்கிய மனிதரிடம் கொடுத்துஇ இதை ' பாதுகாத்து , பராமரித்து மண்ணுலகில் பல்கி பெ...

'இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'

Image
இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'  மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார், தனது மனைவிக்கு குழந்தையைப் பிரசவிக்கச் சரியான ஓர் இடத்தை என்னால் ஏற்பாடு செய்ய செய்ய முடியவில்லையே! என மனவேதனையோடு யோசேப்பு ஓர் இடத்தை தேடிக்கொண்டே இருந்தார். இடமும் கிடைத்தது ஆனால் அவ்விடம் குழந்தை பிரசவிக்க தகுதியான ஓர் இடம் அல்ல, ஓர் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்தார். 'அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.' லூக்கா 2 :7   நான் சிறுவனாக இருக்கும் போது மாட்டுத்தொழுவத்தை/மாட்டுப்பட்டியை குறித்தான முதல் அனுபவம் எனக்குக் கிடைத்தது. சிறுவனாக எமது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது மாட்டிற்கு அவர்கள் பால் எடுக்கும் போது, மாட்டிக்கு ஆட்டிட்கு புல், புண்ணாக்கு கொடுக்கும் போது, அதை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் போது, அவற்றோடு கொஞ்சி விளையாடும் போது வியப்போடு அதைப் பார்த்துக்கொ...

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? Life of a Plantation Child

Image
  தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? https://time.com/3984024/maternal-mortality-photos/ தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய்,  இல்லாட்டி மாடு மேய்க்க போடா........ நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற? நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என் உயிர எடுக்காதீங்கடா என கோபமாக கத்தினார் ஆசிரியர்...... தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ? இவ்வார்த்தைகள் மணியின் மனதை துளைத்துகொண்டே  இருந்தது, தனது நண்பர்கள் முன்னே தன்னை ஆசிரியர் இவ்வாறு பேசியது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மனக்கஷ்டத்தையும், அவமானத்தையும் அடக்கிக்கொண்டு சகஜமாக தனது கல்வி காரியங்களில் ஈடுபட முயற்சித்தான்.   மலையகத்தில் கல்வி கற்ற,கல்வி கற்கும் நிறைய மாணவர்களுக்கு இக்கேள்வி ஓர் புதிய கேள்வி அல்ல, தனது பெற்றோர் படும் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வர துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் இவ் அனுபவங்களை தாண்டி வந்திருப...

Friends, Food and Fellowship

Image
Friends, Food and Fellowship  யோவான் 15 : 12 - 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.  இயேசுவின் வாழ்நாளை பார்க்கும் பொழுது, அவர் ஓர் மக்கள் மனிதன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், ஏனெனில், எப்போதும் அவரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. மற்ற நபர்களை விட இயேசுவின் வாழ்வில் மக்கள் ஒரு புத்தெழுச்சியையும், வித்தியாசத்தையும் கண்டனர். அவரது பேச்சையும், போதனையை கேட்க மக்கள் திரள் திரளாய் அவரை நோக்கி வந்தனர்.  (யோவான் 6 : 6 - உடல்நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.)  (மத்தேயு 5 : 1 - இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.)  எப்போதும் மக்கள் அவரை தேடி வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது இயேசுவின் நண்பர்களான சீடர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.    நண்பர்கள் / Friends இயேசுவின் வாழ்வு மற்று...

Our History / எமது வரலாறு (History of the Plantation Community) 200 years of Slavery

Image
  Our History / எமது வரலாறு   வரலாற்றில் ஜொலிப்பவனுக்கும், ஜெயித்தவனுக்கும் மட்டுமே இடமுண்டு என்கிற கூற்று  நம் மத்தியில் பரவலாக உண்டு. ஜெயிப்பவனின்  வரலாறு அதிகமாக பேசப்படும்,  இவ்வாறு ஜெயிப்பவனுக்கு மட்டும் இடம் என்றால் சரித்திரத்தில் மறக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன ? “ Until the Lion tells the story, the hunter will always be the hero.” 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' இவை ஆப்பிரிக்க பழமொழிகள், சிங்கம் தனது கதையை சொல்லும் வரை, வேட்டைக்காரனே கதையின் நாயகன். இவ்வுலகம் வெற்றி பெற்றவர்களின் கதைகளையே கேட்கிறது, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களின் கதைகளையும் , அவர்களின் குரல்களையும், குமுறல்களை நாம் யாரும் கே...

தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு

Image
தோட்டக்காட்டு இயேசு / மலையக இயேசு இத்தலைப்பு பல கிறிஸ்தவர்களின் முகத்தில் ஒரு சுழிப்பை ஏற்படுத்தியிருக்கும்.    19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட பொருளாதார அமைப்பில் சிக்குண்ட உழைக்கும் மக்கள் பண்ணையார் மற்றும் ஜமீன்தார்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்தனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்பட்ட மக்களாய் உரிமையற்ற சமூகமாய் இவர்கள் காணப்பட்டனர், ' பஞ்சம்,பசி, கடன், குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலை, சாதிக்கொடுமை, சுரண்டல், கடுமையான உழைப்பு, மன உளைச்சல், சுதந்திரமின்மை, தண்டனைகள்,பிள்ளைகளும் அடிமைகளாக நடத்தப்படல், உழைப்பவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படல், குடும்ப பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் ' போன்ற பலவித ஆதிக்க காரணங்களால் இவர்கள் நாளுக்கு நாள் கொடுமை படுத்தப்பட்டனர். எப்படியாவது இந்த அந்தகாரமான பாதாளத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஏங்கிய மக...