‘இயேசு ஓர் நீதிக்கான போராளி’
‘ இயேசு ஓர் நீதிக்கான போராளி’ மார்ச் 31 ம் , திகதிக்கு பின்பதாக இலங்கை நாட்டின் எல்லா நகரங்களிலும் காட்டுத்தீயைப் போல பரவியது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை. மக்கள் தமது வீடுகளில் இருந்து மௌனம் காக்க முடியாமல் தெருவில் அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அடித்தட்டு மக்களின் குரல்கள் இன்று இலங்கை நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கிறது. சாமான்ய மனிதனின் வேதனை இன்று உலகிற்கே அம்பலமாகியுள்ளது. ஆசியாவின் ஆச்சரியம் என மார்தட்டிய நாடு இன்று அதிக கடன் சுமையினாலும் ; ஊழலினாலும் ஆசியாவின் அவமானமாக சித்தரிக்கப்படுகிறது. நமது நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் நீண்ட நீண்ட வரிசைகள் , இரண்டு நாட்களுக்கு முன் இணையத்தில் நான் வாசித்த கவிதை பின்வருமாறு , ‘ அதிகாலையில் குழந்தைகள் அழுகிறார்கள் பால்மா இல்லை , காலையில் ஆண்க...