உடைத்தல் + உருவாக்குதல்
உடைத்தல் + உருவாக்குதல் வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர். சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும் அவற்றை அனுபவித்தவராகவுமே அவர் வாழ்ந்து வந்தார். இயேசு கலிலேயாவில் நாசரேத் என்னும் சிற்றூரில் வளர்ந்து வந்தார். இப்பகுதிகளில் உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களே அதிகமாக வாழ்ந்து வந்தனர். மீனவர்கள்,தச்சர்கள், விவசாயிகள்,மேய்ப்பர்கள்,கூலி தொழில் செய்பவர்களே இப்பகுதியில் அதிகமாக காணப்பட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை படிப்பறிவு அற்றவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், பாவிகளாகவே கருதினர். பதவியில் இருந்தோர் இவர்களை தாழ்நிலையினராகவும் கீழ் நிலையினராகவும் நடத்தினர். கலிலேய மக்கள் விடுதலை சிந்தை உடையவர்கள்,அவர்கள் எப்போதும் தங்கள் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவே வாழ்ந்து வந்தனர். அவர்...