கதறும் இறையியல்
கதறும் இறையியல் நாளுக்கு நாள் இயற்கையானது மனிதனின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி அழுது கொண்டிருக்கிறது . மனிதனின் தவறான செயமுறைகள் காரணமாக இயற்கையானது ஓர் தாயை போல தினமும் பிரசவ வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது . ( உரோமையர் 8: 22) பிரசவ வலியானது எப்படி ஓர் உடலின் அதிகபற்ச பாகங்களை வேதனைக்குள்ளாகுமோ அதேபோல இயற்கையானது பல வேதனைகளை சுமந்து கொண்டு எம்மத்தியில் கண்ணீர் வடிக்கிறது . மனிதனின் பேராசை , அலட்சியம் , பணமோகம் ஆகிய காரணிகள் இயற்கையை கூறுபோட , சுரண்ட முக்கியமான காரணிகளாக இருக்கிறது . இதனால் இயற்கை இரத்தம் சிந்தி துன்பப்படுகிறது . ' கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நோக்கினார் , அவை மிகவும் நன்றாய் இருந்தன எனக் கண்டார் ' என தொடக்கநூல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது . நன்றாய் இருந்த அனைத்தையும் ஆண்டவர் தான் உருவாக்கிய மனிதரிடம் கொடுத்துஇ இதை ' பாதுகாத்து , பராமரித்து மண்ணுலகில் பல்கி பெ...