Posts

Showing posts from 2023

கதறும் இறையியல்

Image
கதறும் இறையியல் நாளுக்கு நாள் இயற்கையானது மனிதனின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி அழுது கொண்டிருக்கிறது . மனிதனின் தவறான செயமுறைகள் காரணமாக இயற்கையானது ஓர் தாயை போல தினமும் பிரசவ வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது .                ( உரோமையர்  8: 22)   பிரசவ வலியானது எப்படி ஓர் உடலின் அதிகபற்ச பாகங்களை வேதனைக்குள்ளாகுமோ அதேபோல இயற்கையானது பல வேதனைகளை சுமந்து கொண்டு எம்மத்தியில் கண்ணீர் வடிக்கிறது . மனிதனின் பேராசை ,  அலட்சியம் , பணமோகம் ஆகிய காரணிகள் இயற்கையை கூறுபோட , சுரண்ட முக்கியமான காரணிகளாக இருக்கிறது . இதனால் இயற்கை இரத்தம் சிந்தி துன்பப்படுகிறது .   ' கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நோக்கினார் ,  அவை மிகவும் நன்றாய் இருந்தன   எனக் கண்டார் ' என தொடக்கநூல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது . நன்றாய் இருந்த அனைத்தையும்   ஆண்டவர் தான் உருவாக்கிய மனிதரிடம் கொடுத்துஇ இதை ' பாதுகாத்து , பராமரித்து மண்ணுலகில் பல்கி பெ...

'இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'

Image
இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்'  மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார், தனது மனைவிக்கு குழந்தையைப் பிரசவிக்கச் சரியான ஓர் இடத்தை என்னால் ஏற்பாடு செய்ய செய்ய முடியவில்லையே! என மனவேதனையோடு யோசேப்பு ஓர் இடத்தை தேடிக்கொண்டே இருந்தார். இடமும் கிடைத்தது ஆனால் அவ்விடம் குழந்தை பிரசவிக்க தகுதியான ஓர் இடம் அல்ல, ஓர் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிறந்தார். 'அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.' லூக்கா 2 :7   நான் சிறுவனாக இருக்கும் போது மாட்டுத்தொழுவத்தை/மாட்டுப்பட்டியை குறித்தான முதல் அனுபவம் எனக்குக் கிடைத்தது. சிறுவனாக எமது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது மாட்டிற்கு அவர்கள் பால் எடுக்கும் போது, மாட்டிக்கு ஆட்டிட்கு புல், புண்ணாக்கு கொடுக்கும் போது, அதை மேய்ச்சலுக்குக் கொண்டு போகும் போது, அவற்றோடு கொஞ்சி விளையாடும் போது வியப்போடு அதைப் பார்த்துக்கொ...